Posts

Showing posts from September, 2015

உன்னைக் கண்டு

Image

இரவும் வரும் பகலும் வரும் - வருடந்தோரும் வரும்

நாட்களில் திறந்திடும் அணைகள் நடந்தசைந்து வரும் நீர்துளிகள் விலையேற காத்திருக்கும் உரங்கள் விரைந்து கலந்திடும் கழிவுகள் எடுத்து குடித்திடும் நகரங்கள் ஏக்கத்தில் காய்ந்திடும் வயல்கள் வாடிக்கையென கடந்திடும் வருடங்கள் வார்த்தைகளை மாற்றின கவிதைகள் 02/10/2016 வண்டலும் உருண்டு வரும் கற்களும் பெருத்து வரும் மேனியை குளிரூட்ட வரும் வண்டியை மெருகூட்ட வரும் அப்புறம் பயிராக்க வரும் எத்தனை நாட்கள் வரும்? 20/09/2015

தாய் மேல் ஆணை

Image

ஆனைமலை

கதிரவன்தழுவும் செந்நிறத்தானை அமர்ந்துபார்க்கும் நமச்சிவாயனை கடம்பவனத்தின் காவல்யானை கடப்பவர்க்குப் பாறையிலானை!.

வாழ்க்கை

வாழ்க்கையென்ற மலைப் பாதையில் ரேகைகளாய் பிரிவுகள் இணைப்புகளை அறிய முக்காலும் தேய்ந்துவிடும் முகங்களும் ரேகையிடும்!. ஒன்று விருப்பப்பாதை சிலபடி இறங்கினால் தெரியும் வொருகுளம் அலையாத நீரில்தெரியுமுன் முகம் காட்டுமதன்குணம்! மற்றொன்றோ படிகட்டுகள் யாரோகட்டி வைத்தவை ஆசைகள் பூட்டியகைகளுடன் கண்கள்மூடியும் கால்செல்லும் அலையலையாய் மனிதர்கள்! மற்றவற்றில் கால்தடங்களில்லை பயணிக்க தடையேதுமில்லை…!

பின்னால் வரும் நிலவு

பின்தொடரும் வொலியால் பின்திரும்ப நானும் பின்னிவரும் கொடியும் பின்திரும்பி நாணும் பின்னல்க ளாடும் இன்னல்கள் வாடும்! உருவத்தைப் பார்க்க முகமொன்றுத் தடுக்கும் புருவத்தைப் பார்க்க பார்வையைத் தொடுக்கும் கருவிழியும் பார்க்கும் கண்ணிமையும் தாக்கும்! காயத்தினால் வுள்ளம் கானகத்தில் வொலமிடும் சாயத்தினால் வுன்னுதடு மிடம்பார்த்துப் புள்ளியிடும் சாய்ந்தவுன் சிரமும் கருமையால் கோலமிடும் இடைவெளிக் குறையும் நிலவோளி நிறையும்!.