Posts

Showing posts from 2016

அலைகள்

படிப்பது உணர்ந்திட வாய்ப்பில்லை என்பது போல எழுதவில்லை என்றால் வாழ்ந்திடும் ரகசியம் போல எழுந்துவரும் பூதங்களை அடக்க முடியாதது போல எழுந்துவரும் புலனினை அடக்க முடியாது போல!.

கவர்தல்

கவர்தல் என்பதை, தெரிந்த நன்றாக புரிந்த ஒன்றை மனதில் பதித்து, தக்க சமயத்தில் தமக்குரிய நடையில் வெளிப்படுத்துதல் என்றும் கூறலாம். தெரிந்தும் தெரியாமலும் என இருவகையாக கவர்தல் நிகழும். மிகவும் பிடித்த பிரபலங்களின்/அன்பர்களின் நடை உடை பாவனைகள் பலரை எளிதில் கவரும். ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில்லதை அனைவரின் முன்பாக அதை வெளிப்படுத்துவார்கள். இது ஒருவகையில் ஜெராக்ஸிங் மாதிரியான நிகழ்வாக இருக்கும். இது முதல்வகை. மற்றொரு வகை ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பிடித்தவர்களின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் சில வழக்கங்கள் தானாக தன்னுடைய கற்பனையுடன் சேர்ந்து நிகழ்வாகவோ அல்லது வார்த்தைகளிலோ வெளிப்படும். இவ்வகையான கவர்தல் பொதுவாக எழுத்துத்துறையில் அதிகமாக காணப்படும். இது இரண்டாவது வகை. அனைவரும் என்றாவது ஒருநாள் கவர்தலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் உண்டான பொதுவான தலைவிதி போலும். இத்தளத்தில் உள்ள சில கவிதைகளில் கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளின் தாக்கத்தையும், கவிஞர் வாலி அவர்களின் கவிநடையையும் காண முடியும். இரண்டாவது வகையாக இருக்கக்கூடும். திரு. சுகி. சிவம் அவர்கள், இதைப்பற்...

உட்பொருள்

கைகூப்பி நம்பிக்கை வேண்ட வரிசையிடம் சேரும் கால்களை வகையாய் பிரித்திடும் பொருள் உலகில் உலவும் உட்பொருள்…!

நீயுறங்கும் பொழுதில்…

ஊஞ்சலாடிய தொட்டிலும் குதித்தாடிய கட்டிலும் உன்தடம்பதிக்க வரிசையில் கைகட்டி நின்றன ஊட்டிவிட்ட பொம்மையும் அவிழ்த்துவிட்ட ஆடையும் உன்விரல்பற்றி வலம்வர தொட்டுப்பிடிக்க வந்தன ஊதிவிட்ட பலூன்களும் கிழித்துப்போட்ட காகிதமும் உன்கரம்பட்டு ஆடிட காற்றிலோடி பறந்தன ஊற்றியெறிந்த புட்டிகள் வண்ணவண்ண டப்பிகள் உன்கவனத்தை கவர்ந்திட உருண்டோசை எழுப்பின