காட்டில் ஓரானை
அன்று ஞாயிறும் தயங்கியெழ நானுமதில் மயங்கிவிழ வண்ண மலர்களும் அசையாமலிருந்துவிட வண்டாய் கண்களும் ஆசையாலுருமாறிவிட சிறகையவள் விரித்துவிட இலைகளை அணைத்துவிட மேனியும் மறைந்துவிட மேற்கில் தெரிந்துவிட வாசகமும் அலையா யெழுந்துவர வாசகரும் சிலையா யிருந்துயெழ நனைந்து வணங்கிவிட நினைவில் பதிந்துவிட நன்று