Posts

Showing posts from April, 2015

காலம் கடந்தன

ஊட்டிய கைகளும் தாங்கிய தோள்களும் வளர்த்துவிட்டன தளர்ந்த நடைகளாய் சுருங்கிய தோல்களாய் தேய்ந்துவிட்டன நினைவுகளே உறவுகளாய் நித்திரையே உலகமாய் ஓய்ந்துவிட்டன அறையிலே படங்களாய் அதன்கீழ் விளக்காய் ஓளிர்ந்துவிட்டன கண்ட கண்களும் உள்ளிருந்த அந்நீரும் தனித்துவிட்டன

விதைகள்

உதவும்கைகளும் உறவின்முறைகளும் நிலைபெறவேண்டி சப்தமயங்கும் சங்கமியங்கும் நினைக்கின்றமனதும் நீண்டகாலமும் உடன்வரவேண்டி உரியவர்பொருளும் ஊரறியுபெயரும் உறவினர்களுதவ உறவுகள்கூடும் அருள்பெறவேண்டி நம்பிக்கைவிதைகளும் நலமுடன்வளரும் அடிப்படையறிவும் அனுபவபார்வையும் வருந்தடைதாண்டி தலையெடுத்தெழுதும் தலைமுறையிலிருக்கும்