காலம் கடந்தன
ஊட்டிய கைகளும் தாங்கிய தோள்களும் வளர்த்துவிட்டன தளர்ந்த நடைகளாய் சுருங்கிய தோல்களாய் தேய்ந்துவிட்டன நினைவுகளே உறவுகளாய் நித்திரையே உலகமாய் ஓய்ந்துவிட்டன அறையிலே படங்களாய் அதன்கீழ் விளக்காய் ஓளிர்ந்துவிட்டன கண்ட கண்களும் உள்ளிருந்த அந்நீரும் தனித்துவிட்டன